Saturday, September 14, 2013

என் மாட்டுவண்டி அனுபவங்கள்.




வலைப்பதிவிட்டு பல காலத்திற்கு  பிறகு மீண்டும் வலைபதிவிட தூண்டிய  என் தனிமைக்கு முதல் நன்றி. மேலும் என்னை உற்சாக  படுத்திய என் அன்பு தம்பி பாரதிதாசனுக்கும் நன்றிகள் பலகோடி.
என்ன எழுதலாம் என்று யோசித்தபொது என் மூளைக்குள் சிக்கிக் கிடக்கும் என் பால்யகால நினைவுகள் எடுத்து கொடுத்தது தான் இந்த தலைப்பு.   
இன்று வீடுகளில் கார்கள் இருப்பதுபோல், அன்று கவுரவத்தின் அடையாளம் மாட்டு வண்டிகள்.  என் சிறுவயதில் எங்கள் வீட்டில் ஒரு கட்டவண்டி(மூங்கில்  தட்டி வண்டி)   ஒரு  மூடாப்பு இல்லாத வில்லு வண்டி / தட்டு வண்டி ( வில்லு - ஷாக்  அப்சொர்பர் பட்டை) ஒரு ஜோடி உழவு  மாடு, ஒரு ஜோடி வண்டி  மாடும் இருந்தது. 

கட்டவண்டி(மூங்கில்  தட்டி வண்டி) வேளாண் பொருட்களை பக்கத்து நகர சந்தைக்கு ஏற்றிச்செல்ல, விளைச்சலை வீடுகொண்டு வந்து சேர்க்க  , வீடுகளிலிருந்து மாட்டுச்சாணம், கண்மாய் மண்ணை நஞ்சை, புஞ்சையில் கொட்டி மண்ணை பண்படுத்துவதற்கு, இந்த வண்டியை பயன்படுத்துவர்.  இது அளவில் பெரிதாக இருக்கும் அதனால் பெரியா (உழவு) மாடுகள் பயன்படுத்தப்படும்.

வில்லு / தட்டு  வண்டியில்  ஐந்துபேர் அமர்ந்து பயணம் செய்லாம் மேலும் இந்த வண்டி பயணத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும், வண்டியில் உட்காரும் இடத்தில் வைக்கோலை மெத்தை மாதிரி அழகாக நிரவி அதன் மேல் ஒரு ஜமுக்காலம் (போர்வை) ஒன்றை விரித்து அதில் குடும்பத்தினர் அமர்ந்து அமர்ந்து பயணம் செய்வோம், ( வைகோலை அப்படி போடுவதற்க்கு இரண்டு காரணங்கள் ஒன்று உட்காரும் பொழுது மெத்தை மேல் உட்காருவது போல் இருக்கும்,மற்றொன்று  மாட்டுக்கு சாப்பிட உணவு.) வண்டியில் ஏற பின் பகுதியில் படி போன்ற அமைப்பு, பிடித்து ஏற கைப்பிடிக்கு கம்பி, பின்புற பயணிகள்   விழாமல் இருக்க தடுப்பு கம்பி மற்றும் அதை மாட்ட கொக்கி போன்ற அமைப்பு என எராளமான வசதிகள் இருக்கும். அமரும் பலகைக்கும் சக்கர அட்சிக்கும் இடையே இரும்பு வில்லு பட்டைகல் (ஷாக்  அப்சொர்பர்) இருப்பதால் அதிகமான அதிர்வுகள் இருக்காது. இந்த வண்டிகளில் பூட்டப்படும் மாடுகள் பொதுவாக இளம் காளைகள் மட்டுமே மேலும்  இந்த மாடுகளை சில ஆண்டுகளுக்கு  விவசாய வேலைக்கு பயன்படுத்தமாட்டோம் ( ஆறு பல் போடும்வரை). இந்த  இளம் காளைகளுக்கு அழகாக கழுத்தில் மணி கட்டி, காலில் சலங்கை கட்டி "சல்சல்'...,சத்தத்துடன் பயணிப்பது இனிமையான அனுபவம்.




    

நாங்கள் தோட்ட வீட்டில் வசிப்பதாள்,  எங்கள்  வீட்டிற்கு வரும் விருந்தினர்களை ஏன.பட்டி பேருந்து நிறுத்தத்திலிருந்து அழைத்துவர நாங்கள் பயன்படுத்தும் BMW  எங்கள் தட்டு வண்டிதான் பெரும்பாலான நேரங்களில் எனது கடைசி சித்தப்பா வீர ராகவன் ஐயாதான் இந்த வண்டிக்கு சாரதி, வண்டி பூட்டிவிட்டால்  எப்படியும் விடாமல் அவரை தொந்தரவு செய்து வண்டியில் தொத்திகொள்வேன் (மாட்டு வண்டியில போறது என்றாலே ஒரு தனி குஷி வந்துடும்).  அப்போது அவருக்கு 20-24 வயதுதான் இருக்கும், வண்டி இழுப்பதும் இளம் காளை  செலுத்துவதும் இளம் காளை வேகத்திற்கு சொல்வா வேண்டும், வீர ராகவன் ஐயா குரலுக்கு மாடு அப்படியே கட்டுபடும் அதட்டி ஹய் ஹய் என்றால் ஓட்டம் பிடிக்கும், மூக்கனாங் கயிறை லேசாகஇழுத்து ஹோ ஹோ ஹோ என்றால் அப்படியே நிற்க்கும் பிரேக் பெயிலியர் எல்லாம் கிடையாது. என்னோ தெரியவில்லை அவரைப்பற்றி எழுதிய இந்த நிமிடம் நான் வசித்து நேசித்த கல்கியின் அருள்மொழிவர்மன் கதாபத்திரம் என் கண் முன்னே வந்து போகிறது. ஆம், கல்கி அருள்மொழிவர்மனை வர்ணித்து போல அத்துணை லட்சங்கள் அமைந்தவர்தான் என் சித்தப்பா, அப்படி அவர் வண்டி செலுத்தும் அழகில் மையல் கொண்ட எத்துனை பெண்டிரின் கண்பட்டதோ என்னவோ தற்போது (முன் தலையில்) முடி துறந்த அருள்மொழி ஆகிவிட்டார். (பொன்னியின் செல்வன் வாசித்த அநேகருக்கு மிக பொருத்தமான விடயமாக இறுக்கும் என்று நினைக்கிறேன்). பல முறை அவர் என்னை அப்படி  அழைத்து  சென்றது என் முதல் சித்தப்பா கேசவன் ஐயா & ரேவதி அம்மா அவர்களை பேருந்து நிறுத்தத்திலிருந்து அழைத்துவரத்தான்.


என்  கடைசி நெடுந்தூரத்  தட்டு வண்டி பயணம் மே 22, 1991.  இந்த நாளை அவ்வளவு சிக்கிரம் மரக்கமுடியாது, காரணம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதன் மறுநாள், அன்று அதிகாலையிலேயே  கோகுலன்   மாமா திருமணத்துக்கு   நாங்கள் குடும்பத்துடன் பேருந்தில் வெங்கடச்சலபுரம் செல்ல திட்டமிட்டுக் கிளம்பிக் கொன்டிருக்கும்போது எங்கள் குடும்பத்திற்க்கு   மூன்று தலைமுறையாய் சலவை செய்யும் திரு.முத்தையா அவர்கள் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட தகவளையும் பேருந்துகள் ஓடாது என ஊருக்குள் பேசிக் கொள்கிறார்கள் என்ற தகவளையும் சொன்னார். பிறகு என்ன செய்வது என்ன யோசித்த பெரியவர்கள் தட்டு வண்டியில்  பயணப்படுவது என முடிவு செய்து. அதன்படி 16 கி.மீ தட்டு வண்டியில் சென்று திருமண விசேசங்களில் கலந்து கொண்டோம். அதன் பின்பு சில ஆண்டுகலில் ட்ராக்டர், பைக் & கார்களின் வரவால்    மாடுகள் & வண்டிகள் விற்கப்பட்டு என்னக்கு அடுத்து வந்த என் சித்தப்பா குழந்தைகளுக்கு கதைகள் மூலமே அறிமுகப்படுத்தபட்டது... 


மாட்டு வண்டியின் பாகங்கள் / பயன்படுத்தப்படும் பொருட்கள்:-


வண்டி மசகு: மாட்டுவண்டியில் உயவு(தேய்மானத்தினை குறைக்கபயன்படும் மசகு ) வைக்கோல் சாம்பல், விளக்கெண்ணெய் கலந்து "வண்டி மசகு” (கிரீஸ்) தயாரிப்பர். தினமும் வண்டியில் மாடுகளை பூட்டுவதற்கு முன், இரு சக்கரங்களையும் இணைக்கும் இரும்பு அச்சு, சக்கர குடங்களுக்குள் "மசகு' தடவுவர். சக்கரங்களுக்கு அச்சாணி பொருத்தி, "பூட்டு'ப் போடுவர்.             
 அச்சாணி: இரவு நேரங்களில் பயனம் முடிந்ததும் வண்டியை லாக் செய்வது போல் மாட்டு வண்டிக்கு வண்டி சக்கரம் கழண்டு விடாமல் தடுக்கும் இரும்பு பட்டை.

தார் குச்சு: & சாட்டை குச்சி :  மெலிய மூங்கில் கம்பில் ஊசி ஆனி அடித்து வைத்து இருப்பார்கள் மாடு மெதுவாக போகு பொழுது லேசாக ஒரு குத்து குத்துவார்கள். சாட்டை குச்சி என்பது தார் குச்சியுடன் இணைக்கப்பட்ட சாட்டை கயிரு கொண்ட அமைப்புதான். ( இது பலநேரம் என் சேட்டையை அடக்க  எனது கடைசி சித்தப்பா வீர ராகவன் ஐயா பயன்படுத்தும் ஆயுதமாகவே இருந்தது).

நோத்தடி: மாடு வண்டியில் பூட்டபடும் கம்பு. வண்டி சும்மாக இருக்கு பொழுது சீசா மாதிரி விளாயாடலாம்.

நன்றி,

உங்கள் அன்புக்குரிய நண்பன்.

கோவிந்தராஜ் 



2 comments:

Unknown said...

அருமையான பதிப்பு. வருங்கால சந்ததிகளுக்கு தகவல் தரும் பதிப்பு.வாழ்த்துக்கள் ஜி

Unknown said...

சூப்பர் ஜி... சூப்பர் ஜி... சூப்பர் ஜி...